பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூல மது.
பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவசிந்தை யால்.
அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை.
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத் தேடு.
கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி.
நல்லானைப் பூசித்து நாத னெனவுருகில்
நில்லதோ வீச னிலை.
அடியார்க் கடியரா யன்புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல்.
ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீநினைந்து கொள்
மெய்ம்மயிர் கூர விருப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று.
செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல்.
பத்தியுடைமை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural