சிற்றின்பம் பேரின்பம்

பூ மூக்கிற்க்கு இன்பம் கொடுக்கும். இசை காதுக்கு இன்பம். ஸ்பரிசம் தோலுக்கு இன்பம், அழகான ஒன்றை பார்த்தால் கண்ணுக்கு இன்பம், சுவை நாக்கிற்க்கு இன்பம். உணவில் வரும் வாசனை மூக்கிற்க்கும் இன்பம் கொடுக்கும். சிலது மூன்று உணர்வுக்கும் இன்பம் அளிக்கும். ஐந்து புலணுக்கும் இன்பம் அளிக்க கூடிய ஒன்று என்றால் அது ஆணும் பெண்ணும் இணையும் காமம். அப்படிப்பட்ட காமத்தை ரொம்ப நேரம் அனுபவிக்க முடியாது. மனம் சோர்வு அடையவில்லை என்றாலும் உடல் சோர்ந்து விடும். இப்படிப்பட்ட குறையுள்ளதால் சிற்றின்பம்.

ஒரு அழகான உருவத்தையோ அல்லது பொருளையோ முதல் முதலாக பார்கிறீர்கள். உங்களுக்கு அதனால் இன்பம் வருகிறது. மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தால் இன்பம் வருகிறதா! ஒரு சிரிப்பு கதைகளை கேட்டால் முதலில் சிரிப்பு வரும். அதே கதையை மறுபடியும் மறுபடியும் கேட்டால் சிரிப்பு வராது. இரண்டு சேவல் சண்டை போடுவதை பார்த்தால் ஒரு விதமான இன்பம் வருகிறது. ஒரு நாள் அந்த இன்பம் வரும். மீண்டும் மீண்டும் சேவல் சண்டை போடுவதை பார்த்தால் இன்பம் வருகிறதா.

உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு உணவை சாப்பிட மனம் ஏங்குகிறது. ஒரு தடவை சாப்பிட ஆரம்பித்த பிறகு மீண்டும் கேட்கிறது. மீண்டும் சாப்பிட்ட பிறகு மனம் மீண்டும் கேட்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சாப்பிட முடிய வில்லை. ஏன் என்று யோசித்ததுண்டா? மனம் இன்பத்தை தேடுகிறது ஆனால் உடலால் அதை ஏற்க முடியவில்லை. மாற்று பாலினம் இல்லாத சமயத்தில் சுயயின்பம் கொள்கிறோம். அந்த சுயயின்பத்தை குறிப்பிட்ட நேரத்திற்க்கு மேல் அனுபவிக்க முடியவில்லை. ஐந்து புலன்களுக்கும் இன்பம் அளிக்கக்கூடிய ஆண் பெண் உடலுறவு செய்யும் பொழுதும் அதே பிரச்சனை. உங்கள் மனம் இன்பத்தை தேடுகிறது. ஆனால் கிடைக்கவில்லை. வேறு வழி இருக்கிறதா என்று மனம் யோசிக்க ஆரம்பிக்கிறது. ஒரு ஆண் ஒரு பெண் என்றில்லாமல் ஒரு ஆணும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களும் அல்லது ஒரு பெண்ணும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களும் சேருகிறீர்கள். அங்கேயும் இன்பம் குறைவாக உள்ளது.

என்ன வேண்டுமானலும் செய்யுங்கள், உலகத்திலே மிக பெரிய பணக்காரராக மாறுங்கள் அப்பொழுது இன்பம் எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று பாருங்கள். உலகத்தில் உள்ள அத்தனை கோயிலுக்கும் செல்லுங்கள், எல்லாத்திலும் உங்கள் மனதை செலுத்துங்கள் உங்களின் இன்பத்தின் நேரத்தை கணக்கில் கொள்ளுங்கள். பணம் இருந்தால் நிலாவுக்கு சென்று வாருங்கள் அங்கே இன்பம் கிடைக்கிறதா என்று பாருங்கள். புதிய விசயங்களை கண்டுபிடியுங்கள், நீங்கள் கண்டுபிடித்த பொருள் எல்லோருக்கும் பயன்படுகிறது என்றால் உங்களுக்கு புகழும் பணமும் வரும். அதனால் எவ்வளவு நேரம் இன்பம் அடைகிறோம் என்று உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். தளர்ந்து விடாதிர்கள். பிறந்தது எதற்க்கு என்றால் இன்பத்தை அனுபவம் செய்வதற்க்கே?

மனதுக்கு இன்பம் கிடைக்கிறது ஆனால் இன்பத்தின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. ஏன் என்னால் இன்பத்தின் நேரத்தை அதிகமாக உணர முடியவில்லை என்ற கேள்வி மனதில் எழுகிறது என்றால் உங்களுக்கு பேரின்பத்தின் வாசல் திறப்பதற்க்கு வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இன்பத்தின் நேரம் குறைவாகவும் உடல் சோர்வும் ஏற்படுகிறது என்றால் அது சிற்றின்பம். உடலும் சோர்வடையாமல் மனமும் சோர்வு ஏற்படாமல் இன்பத்தை அனுபவம் செய்தால் பேரின்பம். கோயிலில் ஆண் பெண் உறவுகளோடு இருக்கும் சிற்பத்தின் அர்த்தம் என்பது பேரின்பத்தின் வடிவமாகும்.

பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியை அனுபவிக்க ஏதோ ஒரு பொருளோ அல்லது மற்ற அன்பரின் துணை நமக்கு தேவை. ஆனால் மனங்களை சுத்தம் செய்யும் பொழுது உயிர் எந்த துணையுமில்லாமல் பல மடங்கு இன்பங்களை நமக்கு கொடுக்கும். தனி மனிதனால் நிச்சயமாக இந்த பேரின்பத்தை அனுபவிக்க முடியும். மனதை சுத்தம் செய்யும் நல்ல பழக்கவழக்கங்களை கற்று இறைவனை நோக்கி பயணம் செய்தால் பேரின்பம் கிடைப்பதற்க்கு வாய்ப்புள்ளது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.

-சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

3 thoughts to “சிற்றின்பம் பேரின்பம்”

  1. பேரின்பத்தை அடைய மேலும் விளக்கம் தேவை

    1. போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.கடவுளின் மேல் பக்தி தீவிரமாகும் பொழுது அர்த்தம் புரியும். யோகா செய்ய முயற்சி செய்யவும்.

  2. அருமையான பதிவு. தெளிவான சிந்தனை. தீர்க்கமான எழுத்து. வாழ்த்துக்கள்.

Comments are closed.