உருவமா அருவமா

இறைவனுக்கு உருவம் தேவையா அல்லது தேவையில்லையா!

இறைவனை உணர்ந்தவர்கள் நமக்கு புரியவைப்பதற்க்காக பல முறைகளை கையாண்டுள்ளனர். எல்லோரும் இறைவனை உணரமுடிவதில்லை. அத்தி பூத்தாற் போல் அங்கொன்று இங்கொன்றுமாக நடக்கிறது. அதனால் புராணம், இதிகாசம், கோயில், சடங்கு, சாதி, மதம், தொழில் போன்ற எண்ணெற்ற துறைகளிலும் இறைவனை பற்றி பதிவு செய்துள்ளனர். குழந்தைகளால் நிச்சயமாக அருவ நிலையை வணங்க முடியாது. அவர்களுக்காக ஏற்படுத்திய முறை தான் கோயில். கோயிலில் பல தத்துவங்களை மறைத்துவைத்துள்ளனர். பலரால் உருவத்தை மட்டும் தான் வணங்க முடியும். அதற்க்கு மேல் அவர்களுக்கு தேடல் இல்லை. குழந்தைகள் கேள்வி கேட்டால் கூட சாமி கண்ண குத்திடும். பேசாமல் வணங்கு என்று அறிவுறையாக உள்ளது. எமக்கு தெரிந்த கோயிலில் இருக்கும் சிலையின் அர்த்தங்களை சொல்கிறேன். தவறாக இருந்தால் மண்ணிக்க வேண்டுகிறேன்.

கோயிலில் இருக்கும் சிலைக்கு சங்கு, சக்கரம், தாமரை, தண்டாயுதம், அங்குசம், வேல் வைப்பர்.
சங்கு, புல்லாங்குழல், டமரு என்பது கேட்கக்கூடிய ஒன்று.
சக்கரம் என்பது காலச்சக்கரத்தை நிறுத்தியவர் அதாவது பிறப்பு இறப்பு சக்கரத்தை நிறுத்தியவர் என்று கேள்விப்பட்டதுண்டு.
தாமரை என்பது ஞானம் மலர்வதை குறிப்பது.
தண்டாயுதம் என்பது நடுநாசியின் மூச்சை குறிப்பது. நடுநாசியை பயன்படுத்துபவர்கள் அனுமன், பீமனை போன்று பலமுடையவர்களாக இருப்பர். எலி வாகனம் என்பதும் அதுவே. அங்குசம், கயிறு என்பது மனதை புறத்தே செல்லாமல் இறைவனை நேசிக்க செய்வது.
யானை முகம் என்பது ஐந்து பூதத்தை ஆள்பவர் எனப்படும். கனங்களுக்கு தலைவன்.
வேல் என்பது கால்( காற்று ) கொண்டு கனலை( அக்னி ) எழுப்புவது.
மயில் என்பது மனதை ஆள்பவர் எனப்படும்.
சேவல் என்பது நல்ல செயல்களை( இறைவனை உனர்ந்தவர் ) அறிந்த ஒருவர் மற்றவருக்கு கூவுவது. குருவின் தன்மை.
பாம்பு என்பது குண்டலினி சக்தியை குறிப்பது.
கோமாதா( மாடு ) என்பது ஆன்மாவை உணர்ந்தவர் எனப்படும். சிவலிங்கத்தின் முன் இருக்கும் காளை( நந்தி, நல்லத்தீ ) என்பது இறைவனின் மீது எப்பொழுதும் கவணத்தை வைப்பது.
லிங்கம், விளக்கு என்பது வேல் முட்டுகின்ற பகுதி. மார்கண்டேன் போல் சிவலிங்கத்தை பிடித்தால் எமனை ( கொழை ) உதைத்து சிவனின் அருள் கிடைக்கும்.
காகம், எள், அம்மாவாசை என்பது சூன்யத்தின்( முன்னவன் ) தன்மை.
தீர்த்தம் என்பது அமிர்தத்தை குறிக்கலாம். இனிப்பு, பொங்கல், ஆடிப்பெருக்கு, கங்கை என்பது அன்பு, இன்ப பெருக்கம்.
கோயிலில் நடக்கும் திருமணம் என்பது இறைவனுக்கும் தெய்வத்துக்கும் ( இறைவனை உணர்ந்தவர் ) நடக்கும் நிகழ்வு.
ஆண் பெண் மிருக உறவு என்பது பேரின்பத்தை உணர்ந்தவர். இன்னும் நிறைய இருக்கலாம். மேலே சொன்ன விசயத்தில் தவறு இருந்தால் அத்தவறை கமெண்டில் பதிவு செய்யவும்.

சிந்தனையாளர்கள் சிலைகள் பல உள்ளது போல் இறைவன் பல உள்ளது என்று ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் நாத்திகத்தின் தன்மை வருகிறது. உணராமல் கடவுள் இருக்கிறது என்று ஆத்திகத்தின் நிலை. பிறப்பால் பிராமனன் உள்ளான், அவர்களுக்கு மட்டும் தான் இறைவனை புரிந்துகொள்ளமுடியும் என்று ஒரு சங்கடம். சூத்திரர்களுக்கு அனுமதி இல்லை என்று வேறு ஒரு சங்கடம். அதனால் உருவமில்லாத தன்மை கொண்ட சில மார்கத்திற்க்கு செல்கிறார்கள். இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்லும் நபர் உணர்ந்திருக்க வேண்டும். வேதம் சொல்கிறது, மார்கம் சொல்கிறது அல்லது சித்தர் சொன்னார் என்று உணராமல் சொல்லுவதெல்லாம் புரிதல் இல்லாத ஒரு நம்பிக்கையே. மின் அலைகள், காந்த அலைகள் போன்று உள்ளார் என்று அறிவியலின் கண்ணோட்டத்தை கொண்டால் கூட ஒரு நம்பிக்கையே. இறைவனை பற்றி தீராத தாகம் ஏற்படும் பொழுது நிச்சயம் தங்களுக்கு காட்சி கொடுப்பார். சூன்யமாகவும், சிவமாவும் நமக்கு காட்சி அருள்கிறார்.

அர்ஜுனன் போன்று மனம் கூர்மையாகும் பயிற்ச்சிகளில் ஈடுபட்டால் இறைவனின் அருளை பெறலாம். வேள்வி செய்வது, வேதம் படிப்பது, பூசை செய்வது, அக்னியை வளர்ப்பது எல்லாம் யோகப்பயிற்ச்சியை குறிக்கும். சாப்பிடுவது தூங்குவது போல தினம் யோகப்பயிற்ச்சி செய்தால் வெற்றி நிச்சயம். சிந்தனை செய்வோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

Leave a Reply

Your email address will not be published.