சுத்தம்

காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை கூட்டி வாசலை சுத்தம் செய்து கோளம் போட்டு அழகுபடுத்துகிறார்கள். மேலும் பெண்கள் குளித்துவிட்டு சமையல் அறைக்கு சென்று சமைத்து அனைவருக்கும் உணவு வழங்குகிறார்கள். உணவிடும் பாத்திரங்கள், சாப்பிடும் தட்டு, உடுத்தும் உடை போன்ற பல பொருட்களை சுத்தம் செய்கின்றனர். வீட்டில் முக்கியமான விசேசம் வந்தால் வீட்டில் ஒட்டடை தூசியை தட்டி கூட்டி உப்பு தண்ணீரில் தரையை கழுவி சுத்தம் செய்து மேலும் அனைவரும் குளித்து விட்டு அழகு சேர்கின்றனர். வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்க்கு வரும் பொழுது கால் கழுவி பின் தான் அனுமதிக்கபடுகிறது. கிருமி தொற்று ஏற்படக்கூடாதென்று பெண்கள் மஞ்சள் தெய்த்து குளிக்கின்றனர். சுத்தம் என்பது நமது வீட்டில் உள்ள பெரியோர்களிடம் கற்றுகொள்கிறோம்.

எதாவது பண்டிகை வந்தால் சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளும், கோயிலும் சுத்தம் செய்ப்பட்டு பூஜை செய்து பண்டிகையை முடிப்பர். கோயிலுக்கு செல்லும் பொழுது குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து சாப்பிடாமல் செல்வது வழக்கம். சில கோவில்களில் மாமிசம் சாப்பிடாமல் செல்வது வழக்கம், ஏனென்றால் மாமிசம் அசுத்தம் என நம்பப்படுகிறது. சில பிரிவினர் மாட்டுகறி அசுத்தம் என நம்பப்படுகிறது. சில பிரிவினர் பன்னி கறி அசுத்தம் என நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதி பிரிவினர் சுத்தத்தை கடைபிடிக்காததால் இன்று சுத்தமாக இருந்தாலும் அப்பிரிவினரை வீட்டிற்க்குள் அனுமதி மறுக்கப்படுகிறது.

இஸ்லாத்தில் பள்ளிவாசலுக்கு செல்லும் பொழுது கை, கால், முகம், காது போன்ற பகுதிகளை சுத்தம் செய்த பின் தொழுகை செய்கின்றனர். அழுக்கு சேராமல் இருக்க பிறப்புறுப்பின் மேல் தோலை நீக்குகின்றனர். வெளிப்புற சங்கீதம் கேட்பதே அழுக்காக கருதப்படுகிறது. கிருமி பரவிடும் என்ற நோக்கத்தில் உணவுக்காக மிருகத்தை வெட்டும் பொழுது இரத்தம் முழுவதும் வடிந்த பின் தான் சமைக்கிறார்கள். சில கோவில்களில் இடுப்புக்கு மேலே துணிகள் அணிவது அழுக்காக கருதுகிறார்கள். சில கோவிகளில் பெண்களுக்கு அனுமதில்லை. மாதவிடாய் நேரத்தில் பெண்கள் பெரும்பாலுல் கோவிலுக்கு செல்வதில்லை. மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வீட்டின் பூஜை அறைக்கு செல்ல தடை, ஏனென்றால் மாதவிடாய் அழுக்காக கருதப்படுகிறது. பெண்களை மனமாக கருதப்படுவதாலும் சில கோவிலில் பெண்களுக்கு அனுமதியில்லை என வரலாறு உண்டு.

இப்படி சுத்தமாக இருப்பதால் கடவுளை காண முடியும் என நம்புகின்றனர். சுத்தமாக இருப்பதால் நமக்கு பல நன்மைகளும் சந்தோசமும் வருகிறது. ஆனால் நிம்மதி வருகிறதா என்றால் சந்தேகம். மேல் உடல் சுத்தத்தை வைத்து கடவுளை கண்டிப்பாக உணர முடியாது. உடலில் பல உறுப்புகள் இருக்கிறது, அதிலெல்லாம் அழுக்கு சேராமல் பார்த்துகொண்டால் நமக்கு நோய் என்பதே வராது. அத்தனை உறுப்புகளையும் சுத்தம் செய்வது என்பது எளிதான காரியமில்லை. அப்படி செய்தால் நாம் இளமையாகவே இருப்போம், அது எளிதான காரியமில்லை.

நமக்கு உடல் மட்டுமில்லை மனமும் இருக்கிறது, இதை சுத்தமாக வைத்துக்கொண்டால் மட்டுமே இறைவனை உணர முடியும். சட்டையை கழட்டுவது போல மனதை தற்காலிகமாக கழட்டினால் மட்டுமே கடவுளை உணர முடியும் என்று புரிய வைப்பதற்க்காக சில கோவில்களில் மேலாடையின்றி கோவிலுக்கு வர சொல்கிறார்கள். சிலைகள் நிர்வானமாக இருப்பதற்க்கும் மனதை நிர்வானமாக மாற்றுவதற்க்கும் எந்த வித்யாசமும் இல்லை.

சுத்தமாக இருப்பது மிக நல்லது. பல நேரங்களில் சுத்தம் என்ற பெயரில் முட்டாள்தனமான செயல்களாக இருந்தாலும் அந்த சுத்தம் தான் வாழ்வின் இறைவனை உணருவதற்க்கு வழிகாட்டுகின்றன.  கோயில், பள்ளிவாசல் ( ISLAMIC TEMPLE ), தேவாலயம்( CHURCH ) இன்னும் பிற மதத்தின் வழிபாட்டு தளங்கள் போன்ற அனைத்தும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அசுத்துமாக உள்ள பெரிய கோவில்களில் அபராத தொகை விதிக்க வேண்டும். சுத்தம் பற்றி பெரிய கோயில், ஆலயங்களில் எழுத்துபூர்வமான கோட்பாடுகள் வைத்தால் மிக நல்லது. மனதை சுத்தம் செய்வதற்க்கான வழிமுறைகளை பெரிய கோவில்களில் தனியாக மண்டபம் அமைத்து சொல்லித்தர வேண்டும். கோவில், மசூதி, ஆலையங்களில் மிக சுத்தமாக வைத்தால் மட்டுமே வரும் பக்தர்களுக்கு சுத்தமாக இருக்க வேண்டும் என எண்ணம் தோன்றும்.

மனதை சுத்தமாக வைத்தால் மட்டுமே அழகு கூடும், பெரின்பம் கிட்டும். நாம் தங்கம் போல மின்னுவதற்க்கு மனதை வெறுமை ஆக்க வேண்டும். மனதை சுத்தமாக மாற்றி காத்திருந்தால் மட்டுமே இறைவனை உணர முடியும்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். நன்றி

~ சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *