திதி என்பது ஒரு நாள் என பொருள். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் 0 பாகையில் உண்டு. அன்று சந்திரனை நாம் காண முடியாது. பின் சந்திரன் 120 சூரியனிடமிருந்து விலகும். ஒவ்வொரு 120 விலகும் காலத்தை ஒரு நாள் அல்லது திதி என சோதிடத்தில் குறிப்புண்டு. இவை வளர்பிறை திதிகள் எனப்படும். 1800 பாகை விலகும் நாளன்று பௌவர்னமி என்கிறோம். மீண்டும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் 120 பாகை குறைகிறது. 12 பாகை குறைகிற ஒவ்வொரு காலத்தையும் தேய்பிறை திதிகள் எனப்படும். மொத்தம் 15 திதிகள் உள்ளது.
# | வளர்பிறை / தேய்பிறை திதிகள் |
1 | பிரதமை |
2 | துவிதியை |
3 | திருதியை |
4 | சதுர்த்தி |
5 | பஞ்சமி |
6 | சஷ்டி |
7 | சப்தமி |
8 | அஷ்டமி |
9 | நவமி |
10 | தசமி |
11 | ஏகாதசி |
12 | துவாதசி |
13 | திரியோதசி |
14 | சதுர்த்தசி |
15 | பௌவர்ணமி / அமாவாசை |
திதியை வைத்து நம்மாள் குறிப்புகளை ஞாபகபடுத்திகொள்ள முடியும். வாரம் என்ற முறையே தேவையில்லை. வருடம், தமிழ் மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறையை கொண்டே குறிப்பு எழுத முடியும்.
நமது உறவினர் தமிழ் மாதம் தேய்பிறையில் உள்ள சஷ்டியில் பிறந்துள்ளார் அல்லது இறந்துள்ளார் என்றால் அடுத்த வருடம் அதே மாதம் அதே தேய்பிறை மற்றும் அதே நட்சத்திரம்( பிறப்பு ) அல்லது திதியில்( இறப்பு ) பூசை செய்தால் புண்ணியம் கிடைக்கும் என உண்டு. ஒரு வேலை அந்த நாட்களில் பூசை செய்யவில்லை என்றால் வேறு ஒரு நாட்களை சோதிடம் தெரிந்தவரிடம் கேட்டு பூசை செய்ய வேண்டும். வருடத்திற்க்கு 96 முறை திதி கொடுத்தால் நல்ல பலன் உண்டு என குறிப்பு உள்ளது.
நீர் இருக்கும் இடத்திற்க்கு சென்று முதலில் குளித்து விட்டு அந்தனர் அல்லது அய்யரிடம் சென்று திதி கொடுப்பதற்க்கான தேவையான பொருளை சொல்லுவார். அதை பெற்று கொண்டு அக்னியை வளர்த்து அதில் வாங்கி வந்த அனைத்தையும் எரித்து சாம்பலாக்க வேண்டும். பின்பு அரிசி மாவில் எள் கலந்து நீரில் கரைக்க வேண்டும். அவ்வளவே திதி கொடுக்கும் முறை.
அந்தத்தை புரிந்தவரிடம் சென்று போதுமான செல்வத்தை கொடுத்து சந்தோசம் செய்து பின், திதி வழங்குவதற்க்கான முறையை சொல்வதை செய்து திதியை முடிக்க வேண்டும். இறைவனை உணர்ந்தோரின் தேவை மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் இன்று பூசை செய்யும் அனைத்தும் இறைவனை உணர்ந்தோரா என்றால் இல்லை. அவர்களே தினமும் பூசை செய்து அக்னியை எழுப்பி எல்லா எண்ணங்களையும் எரித்து சாம்பலாக்கி மீண்டும் கங்கையில் குளிக்க வேண்டும். ஆனால் இவர்களோ மற்றவர்களுக்கு திதி கொடுப்பதற்க்கு பயிற்சி தருகிறார்கள். பிராமனராக நடிக்க தெரிந்த ஒருவருக்கு பேராசை இருக்கும். அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று மனம் இருக்காது. கொள்ளை அடிக்க புது வழியை தேடுகிறார்கள். மக்களாகிய நாமும் பிராமனரை பற்றி அறிவு குறைவாக இருப்பதால் எதோ ஒரு பூசை செய்து திதி கொடுத்தோம் என அரைகுறை நிறைவுடன் வருகிறோம். கோயிலிலோ அல்லது பொது இடத்தில் பூசை செய்யும் பிராமனர்களுக்கு அல்லது அய்யர்களுக்கு லய்சன்ஸ் இருந்தால் மட்டும் தான் இந்த சாதி பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிறக்கும் பொழுதே அய்யர் அல்லது பிராமனர் என நினைப்பு.
சரி பூசை செய்யும் விதிமுறைகளை பயன்படுத்தி பூசை செய்தால் நமது மனதிற்க்கோ அல்லது முன்னோர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும் என நம்புகிறோம். சிலர் வருடம் வருடம் பூசை செய்கின்றனர். அதிலும் தை அம்மாவாசை, ஆடி அம்மாவாசை, புரட்டாசி, தீபாவளி போன்ற முக்கியமான நாட்களில் பூசை செய்கின்றனர். ஒவ்வொரு திதிக்கும் தேவதை மற்றும் மந்திரம் உள்ளதாக தெரிகிறது. ஆனால் அதில் இந்த திதியின் நோக்கத்தை பூர்த்தி செய்யுமா என்றால் கிடையாது.
மனதில் வெறுமை என்பது மிக முக்கியம். அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் பூஜ்சியம் பாகை வித்யாசம் உள்ளது போல மனதிற்க்கும் இறைவனுக்கும் உள்ள தூரம் பூஜ்சியம் பாகையில் இருக்க வேண்டும். அதற்க்கு தினமும் நாம் பூசை செய்தால் மட்டுமே நடக்கும். மனம் பெரும்பாலும் அலைந்து திரிந்து கொண்டே தான் இருக்கும். இதனால் இறைவனை விட்டு வெகு தொலைவிற்க்கு சென்று விடுகிறோம். இந்த தூரத்தை குறைப்பதற்க்கு திதி கொடுக்க வேண்டும் என முன்னோர்கள் பழக்கப்படுத்தியுள்ளனர். குறைந்தது இரண்டு மண்டலம் 96 நாட்கள் தொடர்ந்து திதி கொடுத்தல் மனதிற்க்கு சில விசயம் புரியும்.
திதி கொடுக்கும் பொழுது அக்னியை வளர்த்து பொருளை போட்டு எரித்து சாம்பலாக்கிய பின் பிண்டத்தை கரைக்கிறார்கள். இதே போல தான் இறைவனை உணர முடியும் என பெரியோர்கள் நமக்கு கற்று கொடுக்கிறார்கள். உடல் என்ற மாயை, மனம் என்ற மாயை, குண்டலினி ஆற்றல் போன்ற அதி சூச்சும மாயை என மூன்று பிண்ட உருண்டைகள் அனைத்தும் ஆக்கினையில் எரிக்க வேண்டும். சிறு அழுக்கு இருந்தால் கூட இறைவனை காண இயலாது. மொத்தமாக சுத்தம் செய்து ஆக்கினையிலே காத்திருந்தால் இறைவன் என்கிற முன்னவன் தங்களுக்கு காட்சி கொடுப்பான்.
நமக்கும் இறைவனுக்கும் தூரமாக இருந்தால் அதை குறைப்பதற்க்கான வழியை தேடி கண்டுபிடிக்கவேண்டும். இறைவனை உணர்ந்த அந்தனர்களிடம் திதி கொடுக்கும் வழிமுறையை கற்று தினமும் செய்தால் முன்னோர் அருள் புரிவார். யோசிப்போம், செயல்படுவோம், உயர்வோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். நன்றி
~ சசிகுமார் சின்னராஜு.