திருநீறு விபூதி

கோயிலுக்கு சென்று பூஜை முடிந்ததும் கோயில் பூசாரி  விபூதி குங்குமம் பிரசாதமாக   வழங்குவார்.  குங்குமம் வைக்கும் இடம் கூட உணர்வாக பல நேரம் வெளிப்படுகிறது. விபூதியை உணர்வு தெரிகிற நெற்றியில் வைத்தால் கூட பரவாயில்லை,   பல இடங்களில் வைப்பதால் விபூதிக்கு அர்த்தம் தெரியாமல் பல வருடம் முன்பு யாம் தேடலை தொடங்கினேன்.  அந்த விபூதியை பற்றி இங்கு பார்ப்போம். எனக்கே விபூதி அடிக்கிறியா என வசனத்தை நாம் கேட்டிருப்போம். மற்றவர் நமக்கு மொட்டை அடிப்பது. அதாவது நம்மிடம் […]

Share

Read More

பலிபீடம்

அம்மன், சிவன், விஷ்னு போன்ற பெரும்பாலானகோயில்களில் கொடிமரத்துக்கு அடுத்து பலிபீடத்தை எதற்கு வைத்துள்ளார்கள் என இப்பதிவில் பார்ப்போம். அம்மன் கோயில்களில் ஆடு கோழியை பலிகொடுப்பார்கள். சைவக்கோயில்களில் எழுமிச்சையை வெட்டுவார்கள் அல்லது உப்பை கறைப்பார்கள். எழும் இச்சையை அறுக்க வேண்டும்.எழுமிச்சையை அறுத்து குங்குமத்தை தடவி வைப்பர். குங்குமம் வைத்தால் தீயசக்திகள் தாக்காது. குங்குமம் வைக்கும் இடம் நெற்றிபொட்டிலிருந்து உச்சி வரை. நெற்றியிலிருந்து உச்சி வரை கவனமாகயிருந்தால் எழும் இச்சையை அறுத்து விடலாம். தண்ணீரில் உப்பு கறைவது போன்று மன […]

Share

Read More

பூணூல் (யக்ஞோபவீதம்)

தற்போது பூணூல் சில சமுகத்தில் கடைபிடிக்கிறார்கள். ஆனால் அது எதற்க்காக என்று பலரின் கேள்வியாக உள்ளது. அதுமட்டுமில்லை பெருமை, புகழ்க்காகவும் அணியப்படுகிறது. கல்வி என்றால் நாம் பள்ளி, கல்லூரியில் போய் தான் கற்கவேண்டும் என்ற எண்ணம் நம்முள்ளது. ஆனால் நம்முள்ளே கல்வி இருக்கிறது. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் பூணூல் போடப்படுகிறது. இக்கல்வியை கற்றால் மறுபிறவிக்கும் உதவும் என பெரியோர்களின் கூற்று. இறைவனின் அருள் பெற்றால் சில நிமிடங்களில் அறிவில் பல மாற்றம் நிகழ்ந்து விடும். அதனால் […]

Share

Read More

சிவன் சொத்து குலம் நாசம்

சிவன் எங்கும் பரந்தும் விரிந்தும் உள்ளதாக பெரியோர்களின் கூற்று. அவன் நம்முள்ளும் உள்ளான் என்பது உணர்வாளர்களுக்கு புரியும். குலம் என்பது நம்முடைய மூதாதையர்களின் வழிதோன்றல்களாக உள்ள கருத்து. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஒரே சாதியுள் பல குலம் இருக்கிறது. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு குலதெய்வம் இருக்கிறது. ஒரே ஊரிலுள்ள ஒரே சாதியில் பல குலதெய்வம் இருக்கிறது. தாத்தா இறந்தாலும் தாத்தாவின் மகன் வழி பேரனுக்கு இக்குலதெய்வம் மாறாது. தாத்தாவின் மகள் வேறு குடும்பத்திற்க்கு செல்லும்பொழுது குலதெய்வம் மாறிவிடும். […]

Share

Read More

சித்தன் போக்கு சிவன் போக்கு

காடு மலைகளில் பைத்தியம் போல திரிபவன் சித்தன் என பெரும்பாலும் நம்புகிறோம்.ஆனால் அவ்வாரில்லை. சிவனின் ரூபமாக நமது உடலில் சீவன் உள்ளது. எல்லா உயிர்களிலும் உள்ளது. சீவனை பற்றி தெரிந்து கொள்ள மூச்சு காற்றின் வேகத்தை தடுத்து மனதை வசப்படுத்தி இறைவனின் நினைப்பிலே இருக்க வேண்டும். சித்தனின் போக்கு சிவனை அறிந்துகொள்ளவோ அல்லது இணைந்துகொள்ளவோ துடிக்கும். அதனால் தான் சித்தன் போக்கு சிவன் போக்கு. மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். -சசிகுமார் சின்னராஜு

Share

Read More

சுப்பிரமணி

நமது மனம் அங்கும் இங்குமாக பெரும்பாலும் அலைந்து திரியும். அம்மனதை இறைவன் மீது நாட்டம் ஏற்படுமாறு பழக வேண்டும். ஐம்புலனை ஒடுக்கும் பொழுது தண்டத்தின் வழியே ஒளி பெருகினால் சுழுமுனை திறக்கும். அங்கே மனதை ஒருநிலையில் நிறுத்தினால் காதில் மணி ஓசை கேட்கும். மணி ஓசைக்கு நாதம் என்றும் மற்றொரு பெயர். மணி ஓசை கேட்கும் நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களை சுப்ரமணி என்றே அழைக்கலாம். செந்திருவாம் அண்டவரை மனத்தைத்தானும்செலுத்தியே சிறுவாசற் குள்ளேசென்றுஅந்தரமாய் நின்றதொரு […]

Share

Read More

ஆமை புகுந்த வீடு விளங்காது

ஆமை புகுந்தால் எப்படி வீடு விளங்காமல் போகும் என இப்பதிவில் பார்ப்போம். “ஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முக்தியடி குதம்பாய்” என குதம்பை சித்தர் ஆமையை புகழ்ந்துள்ளார். “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து” என திருவள்ளுவர் ஆமையை புகழ்ந்துள்ளார். “ஆமை வரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல் ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்?” என பத்ரகிரியார் ஆமையை புகழ்ந்துள்ளார். ஆமை தான் விஷ்னுவின் இரண்டாவது அவதாரம். அதாவது மனிதன் கருவில் மீனிலிருந்து ஆமையின் குணத்தை […]

Share

Read More

ஆனந்தக்கண்ணீர்

நமக்கு துக்கம் காரணமாக கண்ணீர் வருவது இயல்பான ஒன்று. நோய் தாக்கத்தினால் கூட கண்ணீர் வரும். அளவுக்கு மீறி கண்களுக்கு வேலை கொடுக்கும் பொழுது கண்ணீர் வரும். அதாவது தொடர்ந்து டிவி, கம்பூட்டர் பார்ப்பதால் கண்ணீர் வரும். ஆனால் ஆனந்தக்கண்ணீர் என்பது அப்படியல்ல. அளவுக்கு மீறிய ஆனந்தம் அல்லது சந்தோசம் அடையும் பொழுது வரும் கண்ணீருக்கு ஆனந்தகண்ணீர். இறைவனை நினைத்து உருகும் பொழுதோ அல்லது உடலில் பிராணன் அதிகமாகும் பொழுது நமது உடலில் கண்ணீர் வரும். அளவுக்கு […]

Share

Read More

பால் சைவமா அல்லது அசைவமா

நடைமுறையில் பால் சைவமாக கருதப்பட்டு கோயில்களில் உள்ள சிலைகளுக்கு அபிசேகம் நடக்கிறது. மாட்டுகறி அசைவம் என்ற போது அதிலிருந்து கறக்கும் பால் எப்படி சைவம் ஆகும். மாடு தானாகவே என் கன்றுக்கு பால் போதும் என கொடுக்கிறதா அல்லது நாம் கன்றுக்குட்டிக்கு விடாமல் கறக்கிறோமா? சைவம் என்றால் இறைவன் அருள் பெறும்பொழுது நமது உடலிலே ஊறும். அமிர்தப்பால். இந்த அமிர்தப்பாலைத்தான் பிராமனர்கள் குடிக்கவேண்டும். வாயால் உண்ணும் அனைத்தும் அசைவம். மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து […]

Share

Read More

அறிவு

அறிவு இருக்கா என்று பல நேரங்களில் திட்டு வாங்கிருப்போம்? அறிவு என்றால் என்ன என்று பார்போம்? உறுப்புகளை வைத்து உணர்வது அறிவு. காது என்ற உறுப்பின் மூலம் கேட்பது ஒரு அறிவு. கண்களால் பார்ப்பது ஒரு அறிவு. மூக்கால் நுகர்வது ஒரு அறிவு. நாக்கால் சுவைப்பது ஒரு அறிவு. தோலால் உணர்வது ஒரு அறிவு. ஐந்தறிவு தான் வருகிறது, அப்ப மனிதருக்கு ஆறு அறிவு என்று போதிக்கப்படுகிறதே! ஆறாவது அறிவின் உறுப்பு எது? நமக்கு மனம் என்று […]

Share

Read More

கரோனாவுக்கு அனுபவ தீர்வு

கரோனா வியாதியின் அறிகுறியுடன் இருந்து எந்த மருந்தும் இல்லாமல் சரிசெய்த அனுபவத்தை பகிர்கிறேன். எனது பெயர் சசிகுமார். வில்லிவாக்கம், சென்னை பகுதியில் தற்காலிகமாக ஒருவருடத்திற்க்கு மேலாக தங்கியிருந்தேன். ஜனவரி 20, 2020 பின் தலைவலி காரணமாக வேலை சரியாக செய்ய முடியவில்லை. ஜனவரி 28,2020 பின் ஓய்வில் இருந்தேன். தண்ணீர் தேவைக்காக வாரத்திற்க்கு ஒரு 20 லிட்டர் கேன் வாங்குவேன். தண்ணீரை நானே சென்று தான் எடுத்து வருவேன். 2020 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மாலை […]

Share

Read More

தீபாவளி

காமம், கோபம், பொறாமை, டம்பம், வஞ்சம் போன்ற நரக வேதனை தருவது அசுரர் எனப்படும்.  இதைத்தான் நரகாசுரன் என்கிறோம். வளி என்பது காற்று.  நமது உடலில் தீபம் உள்ளது. அஃது சரியான முறையில் ஏற்றாமல் அல்லது வெளிச்சமில்லாமல் உள்ளது. காற்றைக்கொண்டு கனலை(வெளிச்சத்தை) ஏற்ற வல்லவர்களுக்கு நரக வேதனை தரும் அசுர குணம் அழிக்கப்பட்டு இறைவன் அருளை பெறமுடியும். அதன் காரணமாக தீபாவளி கொண்டாடுகிறோம். எண்ணை தேய்த்து குளித்து உடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுபோல மனதிலுள்ள அழுக்குககளையும் வெளியேற்றினால் மிகவும் […]

Share

Read More

சிற்றின்பம் பேரின்பம்

பூ மூக்கிற்க்கு இன்பம் கொடுக்கும். இசை காதுக்கு இன்பம். ஸ்பரிசம் தோலுக்கு இன்பம், அழகான ஒன்றை பார்த்தால் கண்ணுக்கு இன்பம், சுவை நாக்கிற்க்கு இன்பம். உணவில் வரும் வாசனை மூக்கிற்க்கும் இன்பம் கொடுக்கும். சிலது மூன்று உணர்வுக்கும் இன்பம் அளிக்கும். ஐந்து புலணுக்கும் இன்பம் அளிக்க கூடிய ஒன்று என்றால் அது ஆணும் பெண்ணும் இணையும் காமம். அப்படிப்பட்ட காமத்தை ரொம்ப நேரம் அனுபவிக்க முடியாது. மனம் சோர்வு அடையவில்லை என்றாலும் உடல் சோர்ந்து விடும். இப்படிப்பட்ட […]

Share

Read More

உயிர் வேறு இறை வேறு

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்பது முன்னோர் வாக்கு. உயிர் தான் இறைவன் என்றால் ஏன் மற்ற கிரகங்களில் உயிர் இல்லை. ஏன் விசமாக்கும் இடத்தில் உயிர் வாழ முடியவில்லை. அப்பொழுது உயிரும் இறைவனும் வெவ்வேறு போல. எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன் உயிரிலும் கலந்து இருக்கிறான் என்று சொல்லலாம். உயிர் தான் இறைவன் என்று சொல்லத்தகுமோ! சிந்தனை செய்வோம். மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். –சசிகுமார் சின்னராஜு

Share

Read More

பானையும் குளங்களும்

அக்காலத்தில் பானையில் தான் பெரும்பாலும் சமைப்பார்கள். பானையில் செய்த சாப்பாடு சுவை கூடுதலாக இருக்கும். தண்ணீர் தேங்கும் நீர்நிலைகளாகிய ஏரி, குளம் போன்ற இடத்திலிருந்த களிமண்ணை கொண்டு தான் பானை செய்வார்கள். அப்படி எடுக்கும் பொழுது தானாகவே தண்ணீர் தேங்குவதற்க்கு வசதியாக அமைந்தது. இப்பொழுது எல்லோரும் அலுமினியம், வெள்ளி பாத்திரத்திற்க்கு மாறி விட்டோம். அதனால் குளங்களும் ஏரிகளும் அழிந்துகொண்டு வருகின்றன. மீண்டும் பானையில் உணவுகளை சமைத்தால் குளங்களும் ஏரிகளும் தானாகவே தூர்வாரப்படும். நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். சிந்தனை […]

Share

Read More