திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சான்றாண்மை / Perfectness

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.



துன்பம் தந்தவருக்கும் இனிமையானதை செய்யவில்லை என்றால் சான்றாண்மையால் என்ன பயன்?



துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.



தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.



தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?.


Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?.


He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).



innaasey thaarkkum iniyavae seyyaakkaal
enna payaththadhoa saalpu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அவசியம் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்வதே சான்றாண்மை. குண நலமுடன் அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என ஐந்துடன் இருப்பதும், நல்லனவற்றை அழிக்காமல் அதை வளர்ப்பதும், தகுதி அற்றவர் இடத்திலும் தோல்வியை ஏற்பதும், துன்பம் தந்தவற்கும் இனியவை செய்வதும், சான்றாண்மையாகும். இப்படியானவர் ஊழி கடந்து போற்றப்படுவர். இவர்கள் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என இரு நிலையும் ஏற்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.