திருவள்ளுவரின் திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.



தோண்டுபவரையும் தாங்கும் பூமியைப் போல் தன்னை தரக்குறைவாய் பேசுபவரையும் பெருத்துக் கொள்வதே தலை சிறந்தது.



தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.



தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.



தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.


As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.


To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.



akazhvaaraith thaangum nilampoalath thammai
ikazhvaarp poruththal thalai

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.



மரணம் வரை பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் அதனை மறந்து விடுவதே நன்று.



வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.



தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.



அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.


Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;.


Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.



poRuththal iRappinai endrum adhanai
maRaththal adhaninum nandru

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.



இன்னலில் இன்னல் விருந்தை கவனிக்க முடியாமை வலிமையில் வலிமை மடையர்களை பொறுத்தல்.



வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.



வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.



வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.


The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.


To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.



inmaiyuL inmai virundhoraal vanmaiyuL
vanmai matavaarp poRai

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.



நிறைவுத் தன்மை நீங்காமல் இருக்க பொறுமையை போற்றி ஏற்று நடக்க வேண்டும்.



நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.



சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.



பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.


Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain


If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience



niRaiyutaimai neengaamai vaentin poRaiyudaimai
poatri yozhukap padum

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.



பொறுக்காதவரை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை பொறுத்துக் கொள்பவரை பொன் போல் போற்றுவார்கள்.



( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.



தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.



தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.


Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.


(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.



oRuththaarai ondraaka vaiyaarae vaippar
poRuththaaraip ponpoaR podhindhu

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.



பொறுக்காதவருக்கு ஒரு நாள் கிடைக்கும் இன்பம் பொறுத்தவருக்கு துணையாகவும் போற்றும் புகழாகவும் இருக்கும்.



தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.



தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.



தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.


Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.


The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.



oRuththaarkku orunhaaLai inbam poRuththaarkkup
pondrunh thuNaiyum pukazh

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.



திறன் இல்லாதவற்றை பிறர் செய்தாலும் துன்பப்பட்டு அறம் அற்றவைகளை செய்யாததே நன்று.



தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.



கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.



பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.


Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!.


Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.



thiRanalla thaRpiRar seyyinum nonondhu
aRanalla seyyaamai nandru

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.



மிகைப் படுத்தி துன்பம் செய்தவரை நாம் நமது தகுதியால் வென்று விடலாம்.



செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.



மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.



ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.


With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.


Let a man by patience overcome those who through pride commit excesses.



mikudhiyaan mikkavai seydhaaraith thaandham
thakudhiyaan vendru vidal

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.



துறவியை விட தூய்மையானவர் தீய சொற்களை பேசுபவரை இறந்தவர் வாய் பேச்சி என்று பார்பவர்.



வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.



நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.



எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்


They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure.


Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.



thuRandhaarin thooimai udaiyar iRandhaarvaai
innaachchol noRkiR pavar

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.



உண்ணா நோன்பு இருக்கும் பெரியவர்களும் பிறர் சொல்லும் இழிவான சொல்லை அலட்சியம் செய்பவருக்கு பின்தான்.



உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.



பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.



பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.


Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.


Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.



uNNaadhu noaRpaar periyar piRarsollum
innaachchol noaRpaarin pin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பொறுத்துக் கொள்ளும் பண்பு அவசியம் தன்னை வேட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய் போல் வாழ் என்கிறார் வள்ளுவ பெருந்தகை. நமது தகுதியால் அடுத்தவர் தவிர்க்கப்படுவார் மேலும், அடுத்தவரின் அசட்டுத்துத் தனமாக வார்த்தைக்கு மதிப்பளிக்காதவரே நோன்பில் சிறந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.