திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வாய்மை / Veracity

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.



வாய்மை என்பது எது என்றால் எந்த ஒரு வகையிலும் தவறு இல்லாமல் சொல்வது.



வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.



உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.



பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.


You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.


Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).



vaaimai enappaduvadhu yaadhenin yaadhondrum
theemai ilaadha solal

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.



பொய்மை வாய்மை போன்றதே குற்றம் தீர்த்து நன்மை செய்யும் என்றால்.



குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.



குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.



குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.


Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.


Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.



poimaiyum vaaimai yitaththa puraidheerndha
nanmai payakkum enin

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.



தனது நெஞ்சம் அறிந்து பொய் சொல்லக்கூடது பொய்யாக இருப்பின் தனது நெஞ்சே தன்னை துன்புறுத்தும்.



ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.



பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.



மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.


Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.


Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).



thannenhj saRivadhu poiyaRka poiththapin
thannhenjae thannaich sudum

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.



உள்ளத்தால் நினைப்பதே பொய்மை இன்றி இருக்கும் உலக்கத்தார் உள்ளத்தில் எல்லாம் இருக்கும்.



ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.



உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.



மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.


True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.


He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.



uLLaththaaR poiyaa thozhukin ulakaththaar
uLLaththu Lellaam uLan

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.



மனதுடன் வாய்மையாக பேசுபவர் தவம் மற்றும் தானம் செய்பவர்களை விட தலைசிறந்தவர்.



ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.



உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.



உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.


Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.


He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.



manaththotu vaaimai mozhiyin thavaththotu
thaananjey vaarin thalai

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.



பொய்யற்ற தன்மைப் போல் புகழுடையது இல்லை ஏமாற்றாத தன்மை எல்லா நன்மையையும் தரும்.



ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.



பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.



பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.


No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.


There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.



poiyaamai anna pukazhillai eyyaamai
ellaa aRamunh tharum

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.



பொய்மையை பொய்யாக்கி வாழ்ந்தால் மற்ற அறச்செயல்கள் செய்யாமலேயே நன்மை தரும்.



பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.



பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.



செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.


If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.


If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.



poiyaamai poiyaamai aatrin aRampiRa
seyyaamai seyyaamai nandru

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.



வெளிச்சுத்தம் தண்ணீரால் ஏற்படும் உள்ளே உள்ள உள்ளத்தின் சுத்தம் வாய்மையால் அறியப்படும்.



புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.



உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.



நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.


Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.


Purity of body is produced by water and purity of mind by truthfulness.



puRaLthooimai neeraan amaiyum aganthooimai
vaaimaiyaal kaaNap padum

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.



இருள்நீக்க ஏற்றப்படும் விளக்குகளோ அறியாமை நீக்க விளக்கப்படும் விளக்கங்களோ விளக்கு ஆகாது. உதரணமாக இருப்பவருக்கு பொய்யற்ற விளக்கே விளக்கு.



(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.



உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.



புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.


Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright.


All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.



ellaa viLakkum viLlakkalla saandroarkkup
poiyaa viLakkae viLakku

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.



நான் உண்மையாய் அறிந்தவற்றுள் இல்லை என தோன்றுவது வாய்மையை விட நல்ல ஒன்று.



யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.



சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.



வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.


Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare.


Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.



yaameyyaak kaNtavatruL illai enaiththondrum
vaaimaiyin nalla piRa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உண்மை என்பது அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருப்பது. பொய்யும் உண்மை போன்றது நன்மை தரும் சமயத்தில். தனக்குத் தானே உண்மையாக இல்லாவிடின் நமக்கு நாமே எதிரியாக இருப்போம். மனதளவிலேயே பொய்யற்றவர் மக்கள் மனதில் நிலைப்பார் இதுவே தானம் தவம் கடந்த மேலானது. நீரில் குளிப்பது புற உடலை தூய்மைச் செய்யும் என்றால் உண்மையுடன் இருப்பது அகத்தூய்மைச் செய்யும். வெளிச்சம் போன்ற தீர்க்கமான முடிவை பெற நினைக்கும் சான்றோர் பொய்யாமையை போற்ற வேண்டும். உண்மையை விட சிறந்தது உலகில் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.