திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வாய்மை / Veracity

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.



பொய்யற்ற தன்மைப் போல் புகழுடையது இல்லை ஏமாற்றாத தன்மை எல்லா நன்மையையும் தரும்.



ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.



பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.



பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.


No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.


There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.



poiyaamai anna pukazhillai eyyaamai
ellaa aRamunh tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உண்மை என்பது அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருப்பது. பொய்யும் உண்மை போன்றது நன்மை தரும் சமயத்தில். தனக்குத் தானே உண்மையாக இல்லாவிடின் நமக்கு நாமே எதிரியாக இருப்போம். மனதளவிலேயே பொய்யற்றவர் மக்கள் மனதில் நிலைப்பார் இதுவே தானம் தவம் கடந்த மேலானது. நீரில் குளிப்பது புற உடலை தூய்மைச் செய்யும் என்றால் உண்மையுடன் இருப்பது அகத்தூய்மைச் செய்யும். வெளிச்சம் போன்ற தீர்க்கமான முடிவை பெற நினைக்கும் சான்றோர் பொய்யாமையை போற்ற வேண்டும். உண்மையை விட சிறந்தது உலகில் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.