திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சூது / Gambling

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.



ஒரு முறை வென்று நூறு முறை தோற்கும் சூதாடிகளுக்கு உண்டாகுமா? நன்மைகள் பெற்று சிறப்புடன் வாழும் வழி.



ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.



ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?.



ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?.


Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day?.


Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?



Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol
Nandreydhi Vaazhvadhor Aaru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தூண்டில் தங்கம் என்றாலும் மீனுக்கு அது ஆபத்தானது அப்படியே சூது. அது ஒருமுறை வெற்றிகாட்டி பலமுறை தோல்வி தந்து வறுமைக்கு உரிமையாக்கி உள்ளத்தை நிறைவற்றாக்கி விடும். பண்புடன், உடை செல்வம் உணவு சுய அறிவு கற்ற கல்வி ஐந்தையும் நம்மைவிட்டு விலகச் செய்யும். இத்தனை இழப்புக்கும் பின்னும் காதலிக்கப்படும் சூது போல் உயிரானது துன்பத்தை காதலிக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.