திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கூடாநட்பு / Unreal Friendship

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.



சிரித்த முகத்துடன் பழகி நெஞ்சத்தில் வஞ்சம் கொண்டோர்க்கு அஞ்சி விலக வேண்டும்.



முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.



நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.



சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.


'Tis fitting you should dread dissemblers' guile,
Whose hearts are bitter while their faces smile.


One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.



mukaththin iniya nakaaa akaththinnaa
vanjarai anjap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நேர்மையற்ற மனிடப் பதர்களின் நட்பு நல்லதல்ல. பகை உணர்வு வந்தால் பல நூல்களாலும் பக்குவம் பெறமுடியாது. போலியாக சிரிப்பதும் அழுவதும் மனிட பதர்களின் பண்பு இவர்களிடம் கவனமாக விலக வேண்டும். பகைவரின் நட்பு கட்டாயம் ஏற்கவேண்டிய சுழலில் மனதளவில் விலகி ஒதுக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.