திருவள்ளுவரின் திருக்குறள்

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.



வீரம், மானம், இறுதி வரை தேவையானவைகள், தெளிவான முடிவு என நான்கும் அவசியமானது படைக்கு.



வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.



வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.



வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.


Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.


Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army



maRamaanam maaNda vazhichchelavu thaetram
enanhaankae Emam padaikku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உட்பிரிவுகளுடன் அஞ்சாத படை ஆள்பவரின் முதன்மையானது. நாகத்தின் ஒசை கேட்டு ஓடும் எலிக் கூட்டமாய் நடுக்க செய்யும் அஞ்சாத படை பழைமையானது. வாழைத்தார் போல் அடுக்கப்பட்ட படை எண்ணிக்கை குறைந்தாலும் வெற்றி பெறும். மன உறுதி உள்ள வீரர்கள் இருந்தும் வழிநடத்த சரியான ஆள் இல்லை என்றால் வெற்றி இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.