திருவள்ளுவரின் திருக்குறள்

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.



பொருள் என்ற மாறுபாடு இல்லாத புரிதல் இருளை அகற்றும் எண்ணிய துறைகள் சென்று.



பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.



பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.



பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.


Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.


The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).



poruLennum poiyaa viLakkam iruLarukkum
eNNiya thaeyaththuch chendru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஒன்றுமற்ற ஒருவரை மதிக்கச் செய்யும் பொருளே பொருள் இது இல்லை என்றால் யாரும் மதிப்பது இல்லை. இருள் அகற்றும் பொருள் இன்பமும் அறமும் திறமும் வளர்க்கும். அருள் என்ற அன்பின் குழைந்தையை பொருளே வளர்க்கும். குன்றின் மேல் நின்று யானையின் சண்டையை காண்பதைப் போல் தனக்கு பாதகமின்றி பொருளை அடைந்தால் அறமும் இன்பமும் இசைந்து இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.