திருவள்ளுவரின் திருக்குறள்

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.



இயல்பாய் விடு இயல்பாகவே பல செயல்கள் நடக்கும். இயல்பாக விடாதே துணையாக இருக்கவேண்டிய செயல்களை.



காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.



காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.



நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.


Slumber when sleepy work's in hand: beware
Thou slumber not when action calls for sleepless care!.


Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.



thoonguka thoongich seyaRpaala thoongaRka
thoongaadhu seyyum vinai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சூழ்நிலை அறிந்து துணிந்தால் தீமைகளை தடுக்கலாம். இயல்பாக சில செயல் நடக்கும் எனவே இயல்பாகவும் இருக்கவேண்டும், தேவை என்றால் தகந்த கருவியுடன் செயல்பட வேண்டும். உடன் வருபவர் அஞ்சினால் அச்சத்தை போக்குவது பெரியவர்களின் பண்பு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.