திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஊக்கமுடைமை / Energy

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.



உள்ளத்தின் எண்ணங்கள் அனைத்தும் உயர்வானதாகவே இருக்கவேண்டும். உயர்வற்றவை, விலக்கினாலும் விலகாவிட்டாலும் வீரியம் அற்றுப்போகும்.



எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.



நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.



நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.


Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.


In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.



uLLuva thellaam uyarvuLLal matradhu
thaLLinunh thaLLaamai neerththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உரிமையாக அடையவேண்டிய உடைமைப் பொருள் ஊக்கம், அது இல்லை என்றால் அடைந்த எல்லாம் மாறும். ஊக்கம் உள்ளவர்கள் தோல்வி கடந்து வெற்ற அடைவார். ஊக்கமே வாழ்வின் நிலைப்பாட்டை தீர்மாணிக்கும். தந்தம் உள்ள யானையை எதிர்க்கும் புலி ஊக்கத்திற்கு நல்ல உவமை. ஊக்கம் இல்லாதவர் இயந்திர மனிதனே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.