திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஒற்றாடல் / Detectives

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.



கண்காணித்து தந்த தகவல்களை மேலும் ஒரு கண்காணிப்பினால் கண்காணித்து அறிந்துக் கொள்ளவேண்டும்.



ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.



ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.



ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.


Spying by spies, the things they tell
To test by other spies is well.


Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.



otrotrith thandha poruLaiyum matrumoar
otrinaal otrik koLal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நடப்புகளை அறிந்து நூல்களில் தெளிவுபெற்று இருப்பதற்கே கண் உள்ளது. கண்காணிப்பதற்கும் இதுவே அவசியம். செயல்களில் மாற்றம் இல்லாதபடியும், அதே சமயத்தில் செயல்கள் தந்த மாற்றத்தை காண்காணிப்பதும் ஆட்சியாளர்களின் பணி. காண்காணிப்பை பலர் மூலம் உறுதி செய்வது நல்லது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.