திருவள்ளுவரின் திருக்குறள்

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.



போர் மூண்ட காலத்தில் அடக்கி ஆள ஆடசியாளர் வெருப்படைந்து சீர் கெடுவர்.



முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.



நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.



முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.


Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.


The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.



seruvandha poazhdhir siRaiseyyaa vaendhan
veruvandhu veydhu kedum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வெறுப்புடன் நோக்காமல் தகுந்த ஆதாரத்தை அறிந்து தீர்ப்பு கூறுவது ஆட்சியர் கடமை. மேலும் வெறுப்புடன் தீய சொற்களை பயன்படுத்துவதும் மனிதபிமானமற்ற செயல் செய்வதும் தீர துன்பத்தையும் நிலத்திற்கு ஆறாத பழியும் உண்டாக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.