திருவள்ளுவரின் திருக்குறள்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.



நுனி மரத்திற்கு ஏறியவர் போல் தனது திறனை உயர்ந்ததாக மதிப்பிட்டவர் கிளை முறிந்து உயிர் முடிவை கான்பதுப் போலவே முடிந்து விடுவார்.



ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.



ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.



தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.


Who daring climbs, and would himself upraise
Beyond the branch's tip, with life the forfeit pays.


There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.



nunikkompar ERinaar aqdhiRanh thookkin
uyirkkiRudhi aagi vidum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயலின் வலிமை சுயம் மற்றும் துணையானவர்களின் வலிமை எதிரியின் வலிமை அறிந்து எது வேண்டாதது அதை விலக்கி செயல்பட சாதிக்க முடியாதது இல்லை. இளகுவானதாக இருப்பினும் அளவில் அதிகமான பாரம் கூடும். எனவை அளவறிந்து வாழ வேண்டும். வரவு குறைந்ததாக இருப்பினும் செலவு மிகாமல் இருக்க வேண்டும். தன்னிடம் உள்ளதைக் அறிந்து வாழ வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.