திருவள்ளுவரின் திருக்குறள்

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.



மனதின் இயல்பு போல் காட்டினாலும் ஒருவர் சார்ந்த இனத்தின் வெளிப்பாடாக இருப்பதே அறிவு.



ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.



அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.



ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.


Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.


Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.



manaththu Ladhupoalak kaatti oruvaRku
inaththuLa thaakum aRivu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மானிட பதர்களான சிறிய இனத்துடன் அதே இனம் மட்டுமே உறவு பாராட்டும். இருப்பிடத்தின் குணங்கள் நம்மை பற்றிவிடும் என்பதால் அறிவற்றதை அறிவாக காட்டும் என்பதை உணர்ந்து மனதை தூய்மை செய்யவேண்டும். மனத்தூய்மை உள்ள சான்றோர் இனப்பற்றுக் கொள்வதில்லை. மனத்தூய்மை உண்டானால் மறு பிறப்பும் நன்றாக அமையும் தீமையும் அண்டாது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.