திருவள்ளுவரின் திருக்குறள்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.



கற்று இங்கே மெய்ப்பொருளைக் கண்டவர் முன்னேறுவர் மறந்தும் இங்கே வாராத வழியில்.



கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.



பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.



துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.


Who learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again.


They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.



katreeNdu meypporuL kaNdaar thalaippatuvar
matreeNdu vaaraa neRi


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உண்மை பொருள் எது என அறியாமல் உலகில் உள்ளவற்றை எல்லாம் பொருள் என எண்ணவதே இழிவானப் பிற்ப்பு. மாசு இல்லா காட்சியே இருளை நீக்கும். காட்சி அறியும் கண்களும் பயன் அற்றது உண்மை அறியாவிடின். மெய்பெபொருள் காணும் அறிவே அறிவு. பெயருக்கு கேடு உண்டாக்கும் காமம் வெகுளி மயக்கம் அழித்தால் நோய் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.