திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: துறவு / Renunciation

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.



அடுத்து தொடர்வதை யார் விரும்புவது? பிறவிக் கடக்க முற்பட்டவருக்கு உடம்பும் மிகையானதே.



பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.



இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.



பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.


To those who sev'rance seek from being's varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life?.


What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).



matrum thodarppaatu evan-kol piRappaRukkal
utraarkku udampum mikai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எது எது என்று அறிந்து விலகியவர் அதனிடமிருந்து துன்பம் அடைவதே இல்லை. தேவைகள் சரியாக நடக்க துறவு அவசியம் துறவால் நன்மைகள் பலபல உண்டு. பார்வையிலேயே பற்று இல்லாமல் இருக்க வேண்டும் அப்படி இல்லாதவர் பற்று உள்ளவரே. பற்று இல்லாதவரைப் பற்றினால் பற்றை விடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.