திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புறங்கூறாமை / Not Backbiting

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.



பிறரை பழித்து பேசுபவர் தன்னை பழிப்பதற்க்கான காரணத்தையும் திறமையுடன் அறிந்து கூற வேண்டும்.



மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.



அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.



பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.


Who on his neighbours' sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.


The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published



piRanpazhi kooRuvaan thanpazhi yuLLum
thiRan-dherindhu kooRap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறமற்று தேவையற்றதை செய்பரும் புறங்கூறாது இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பது நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியா வார்த்தை சொன்னாலும் பரவயில்லை பின்னாக புறம் பேசாதே. தன் குற்றத்தை நிக்க முயல்பவர் பிறரை புறம் செய்யமாட்டார். யாரோ ஓருவர் குற்றம் போல் தன் குற்றத்தை ஆராய்ந்து திருத்தினால் துன்பம் என்பது இல்லாமல் போகும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.