திருவள்ளுவரின் திருக்குறள்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.



ஆசையைக் கொடுக்கும் புருவம் வளையாமல் நிமிர்ந்து கோடாக மறைத்தால் நடுக்கம் இல்லாமல் செய்யும் இவள் கண்.



வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.



அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.



புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.


If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart.


Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.



kodumpuruvam koadaa maRaippin nadungaGnar
seyyala man-ivaL kaN


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பெண்மையை கண்டு நெஞ்சம் அடையும் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ள இந்த அதிகாரம் மறைமுகமாக இறமையை அடைந்தவனின் தன்மையை விளக்குகிறது. தேவதைகளால் விரும்பப்படும் மயிலாக என் நெஞ்சம் பெண்களால் கவரப்படுகிறதே. பார்வை ஒன்றே படை கொண்டு அழித்து ஒன்றுமற்றவனாய் என்னை தன்வசம் செய்ததே. உயிர் எடுக்கும் ஒருவன் இருப்பதை முன் அறியவில்லை அதை இவள் உணர்த்தினாள். உயிர் உணர்த்தும் கண் உயிர் எடுக்கவும் செய்யும் பேதையாக இருந்தால். எனவே அழிக்கும் எமனாக, அடிமைபடுத்தும் பிணையாக, வசப்படுத்தும் பொருளாக பெண்ணின் கண்கள் உள்ளன. வளைந்த புருவம் வில்லாக என்னை தாக்காமல் இருக்குமோ?. அடங்க யானைமேல் கல்பதங்கம் நிற்காததைப் போல் மார்பை மறைக்கும் துணி தடுமாறுகிறது. அவளோடு பொருத்துவதற்கு என்றே என் வலிமை குன்றியதோ?. போதை ஏற்றும் பார்வையும், நாணமும் தவிர இவளுக்கு வேறு சிறந்த அணிகலன் தேவையில்லை. இறைதாகம் அல்லது காமம் மட்டும் கண்டாலே போதை தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.