திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கயமை / Baseness

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.



வெளிப்பட்ட கயவரைக் காண்டு அவரைவிட நான் மிகைப்பட்டவன் என்று இருமாப்புக் கொள்ளும் கீழ்.



கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.



தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.



பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.


When base men those behold of conduct vile,
They straight surpass them, and exulting smile.


The base feels proud when he sees persons whose acts meaner than his own.



akappatti aavaaraik kaaNin avarin
mikappattuch chemmaakkum keezh


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நல்மனிதர் போன்ற கயவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள், நல்லவை அறிந்தவர்களைவிட கயவர் உள்ளம் அவலம் இன்றி இருப்பதாலும், நினைத்ததை செய்வதாலும் உயர்வானவர்களாக தெரிகின்றார்கள். கயவரை சிறந்தவன் என்பவன் கிழானவன். சான்றாக இருப்பார்கள் நல்வர்கள், கரும்பாக நசுக்கப்படும் கீழானவர்கள் அச்சத்தை ஆசாரமாக கொள்வர். நல்லாடை அணிவதையும் நற்சோறு உண்ணுவதையும் கண்டு குற்றம் காண நினைப்பவர் கீழானவர்கள். கயவர்கள் தங்களை விலைக்கு அடிமையாக இருப்பதை விரைந்து செய்வார்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.