திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: அவர்வயின்விதும்பல் / Mutual Desire
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: