திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: பொழுதுகண்டிரங்கல் / Lamentations at Eventide
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: