வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள.
சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாரு மினீது பயன்.
மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.
மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.
தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.
வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.
அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.
அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.
ஏறு மதிய மிறங்கிடிலு றங்கிடும்
கூறுமப் பூரணை கொள்.
உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.
துரிய தரிசனம், தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural