திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பண்புடைமை / Courtesy

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.



கூர்மையான வெட்டும் கருவியைப் போன்ற ஆற்றல் உள்ளவர் என்றாலும் மனிதாபிமானம் இல்லாதவர் மரம் போன்றவரே.



மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.



மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.



அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.


Though sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of 'courtesy humane'.


He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.



arampoalum koormaiya raenum marampoalvar
makkatpaNpu illaa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எளிமையாக எண்களைப் போன்ற வார்த்தைகளால் உறவாடுபவரே பண்பாளர். அவர் ஆன்ற குடியில் பிறந்து அன்போடு இருப்பார். உறுப்புகள் மட்டும் மனிதனாக மாற்றுவது இல்லை வெறுக்க தகுந்ததை செய்யாதவரே மனிதர். கத்தி போல் கூரிய அறிவு இருந்தும் மனித பண்பு இல்லாதவர் மரம் போன்றவர். பண்பாளர்கள் செயல்களே உலக இயக்கத்திற்கு காரணம். பண்பற்றவர் சேர்த்த பெருஞ்செல்வம் பாழே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.