திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: குடிமை / Nobility

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.



நலமுடன் இருக்க வேண்டும் என்றால் நாணத்தை உடையாக்க வேண்டும். நற்குடி நான் என வேண்டும் என்றால் யாருக்கும் வேண்டும் பணிவு.



ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.



ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.



தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.


Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.


He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.



nalamvaeNtin naaNutaimai vaeNtum kulamvaeNtin
vaeNtuka yaarkkum paNivu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

திடத்தனம்மையும் நாணுதலும் நற்குடிக்கு அழகு. சுய காட்டுப்படும், உண்மையும், உற்சாகமும், கொடுக்கும் பண்பும் நற்குடியின் இயல்பு. எதன் பொருட்டும் குற்றம் செய்யாத நற்குடி பிறந்தவரின் சிறிய தவறும் வானத்து மதியாய் வெளிப்படும். காலில் ஒட்டிய மண் நிலத்தின் தன்மை உணர்த்துவது போல் நற்குடி பிறந்தவர் வாய்ச்சொல் உணர்த்தும். பணிவே நற்குடியாக மாற்றும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.