திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: குடிமை / Nobility

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.



குண நலனில் அக்கரையற்ற தன்மை தோன்றினால் அவன் மனிதகுலமா? என ஐயம் தோன்றும்.



ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.



நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.



என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.


If lack of love appear in those who bear some goodly name,
'Twill make men doubt the ancestry they claim.


If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.



nalaththin-kaN naarinmai thoandrin avanaik
kulaththin-kaN aiyap patum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

திடத்தனம்மையும் நாணுதலும் நற்குடிக்கு அழகு. சுய காட்டுப்படும், உண்மையும், உற்சாகமும், கொடுக்கும் பண்பும் நற்குடியின் இயல்பு. எதன் பொருட்டும் குற்றம் செய்யாத நற்குடி பிறந்தவரின் சிறிய தவறும் வானத்து மதியாய் வெளிப்படும். காலில் ஒட்டிய மண் நிலத்தின் தன்மை உணர்த்துவது போல் நற்குடி பிறந்தவர் வாய்ச்சொல் உணர்த்தும். பணிவே நற்குடியாக மாற்றும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.