திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: மருந்து / Medicine

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.



செரிக்கும் அளவை அறிந்து கடைப்பிடித்து ஒவ்வாமை தராத உணவை உண்க நன்கு பசித்ததும்.



முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.



முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.



உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.


Knowing the food digested well, when hunger prompteth thee,
With constant care, the viands choose that well agree.


(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).



atradhu aRindhu kataippitiththu maaRalla
thuykka thuvarap pasiththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாத பித்த சிலேத்துமம் என மூன்றில் அளவு கூடுவதும் குறைவதுமே நோய். உண்ட உணவு செரித்தபின் போற்றி உண்பவருக்கு மருந்து தேவையில்லை. உணவை சரியாக தீர்மானித்தால் அளவை அறிந்து உண்டால் நோய் வராது. நோய் என்ன ஏன் வந்தது எப்படி தீர்ப்பது எந்த மாதரியான காலத்தில் வந்துள்ளது என்பதை ஆராய்ந்து மருந்து எடுக்க வேண்டும். நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.