திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சூது / Gambling

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.



பொருளாதார நிலையை சீரழித்து, பொய்யான வாழ்வை மேற்கொள்ளச் செய்து, அருள் அற்றவராக மாற்றி துன்பத்தில் திண்டாடச் செய்யும் சூது.



சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.



சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.



பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.


Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
All grace, and leaves the man to utter misery a prey.


Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).



poruLketuththup poimaeR koLeei aruLketuththu
allal uzhappikkum soodhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தூண்டில் தங்கம் என்றாலும் மீனுக்கு அது ஆபத்தானது அப்படியே சூது. அது ஒருமுறை வெற்றிகாட்டி பலமுறை தோல்வி தந்து வறுமைக்கு உரிமையாக்கி உள்ளத்தை நிறைவற்றாக்கி விடும். பண்புடன், உடை செல்வம் உணவு சுய அறிவு கற்ற கல்வி ஐந்தையும் நம்மைவிட்டு விலகச் செய்யும். இத்தனை இழப்புக்கும் பின்னும் காதலிக்கப்படும் சூது போல் உயிரானது துன்பத்தை காதலிக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.