திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சூது / Gambling

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.



கவர்ந்து இழுக்கும் சூதாட்டக் கழகமும், சூதாட்டக் கருவிகளைக் கொண்ட கையும் அறிந்தவர் ஒன்றுமற்றவராக மாறுவார்.



சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.



சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.



சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.


The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,
Thirsting for gain- the men in other days who came to nought.


Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).



kavaRum kazhakamum kaiyum tharukki
ivaRiyaar illaaki yaar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தூண்டில் தங்கம் என்றாலும் மீனுக்கு அது ஆபத்தானது அப்படியே சூது. அது ஒருமுறை வெற்றிகாட்டி பலமுறை தோல்வி தந்து வறுமைக்கு உரிமையாக்கி உள்ளத்தை நிறைவற்றாக்கி விடும். பண்புடன், உடை செல்வம் உணவு சுய அறிவு கற்ற கல்வி ஐந்தையும் நம்மைவிட்டு விலகச் செய்யும். இத்தனை இழப்புக்கும் பின்னும் காதலிக்கப்படும் சூது போல் உயிரானது துன்பத்தை காதலிக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.