திருவள்ளுவரின் திருக்குறள்

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.



பொருளை மட்டுமே பொருளாக கொள்பவரின் புலன்களை விரும்பமட்டார்கள் அருளாள் வரும் பொருளை தேர்ந்தெடுக்கும் அறிவுள்ளவர்கள்.



பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.



அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.



அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.


Their worthless charms, whose only weal is wealth of gain,
From touch of these the wise, who seek the wealth of grace, abstain.


The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.



porutporuLaar punnalanh thoayaar arutporuL
aayum aRivi navar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அன்புக்கு இணங்காமல் பொருளுக்கு இணங்கும் பெண்களின் ஆசை வார்த்தை அவமானத்தை தேடித்தரும். பிணத்துடன் உறவாடுவது போன்றது அவர்களுடன் உறவாடுவது. நல்லறிவு பெற்றவர்கள் பொதுமகளிரை நாடுவது இல்லை. வரைமுறை அற்ற பெண்கள் அறிவற்றவற்றவர்கள் மூழ்கும் நரகம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.