திருவள்ளுவரின் திருக்குறள்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.



பணத்தையே குறிக்கொளாக கொண்ட பெண்களிடம் பொய்யாக உறவுக் கொள்வது எந்த உணர்வும் இல்லாத பிணத்தை தழுவுதல் போன்றது.



பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.



பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.



விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.


As one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women's charms!.


The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.



porutpeNtir poimmai muyakkam iruttaRaiyil
Edhil piNandhazheei atru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அன்புக்கு இணங்காமல் பொருளுக்கு இணங்கும் பெண்களின் ஆசை வார்த்தை அவமானத்தை தேடித்தரும். பிணத்துடன் உறவாடுவது போன்றது அவர்களுடன் உறவாடுவது. நல்லறிவு பெற்றவர்கள் பொதுமகளிரை நாடுவது இல்லை. வரைமுறை அற்ற பெண்கள் அறிவற்றவற்றவர்கள் மூழ்கும் நரகம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.