திருவள்ளுவரின் திருக்குறள்

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.



குடும்ப தலைவிக்கு அஞ்சும் அடுத்தது அறியும் அறிவில்லாதவன் செயல்திறன் சிறப்பாக இருக்காது.



மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.



தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.



மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.


No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.


The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.



manaiyaaLai anjum maRumaiyi laaLan
vinaiyaaNmai veeReydha lindru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மனைவி மக்கள் மட்டுமே என வாழ்ந்தால் மான்பு மிகுந்தவராக முடியாது. மனைவியிடம் பணிவுடன் நடந்து நாணமற்று வாழலாம் மாறாக அவள் ஏவல் செய்யும்படி நடந்தால் நற்பெறு அடையமுடியாது. பெண்ணின் அழகிய நெற்றிக்கு திலகம் போல் ஒட்டிக்கொண்டு இருப்பவர் நண்பர்கள் மத்தியில் சிறப்பு அடையமாட்டார். பெண்ணுக்கு ஏவல் வேலை செய்பவரை பெண்ணே மதிப்பதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.