திருவள்ளுவரின் திருக்குறள்

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.



செத்தாரைப் போல் (துறந்தவர்) சிறப்புகள் பெற்று வாழ்பவர் என்றாலும் நற்கதி அடைய முடியாது வாழும் உயர்ந்தவர் சினம் அடைந்தால்.



மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.



மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.



என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.


Though all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they're lost.


Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.



iRandhamaindha saarputaiyar aayinum uyyaar
siRandhamaindha seeraar seRin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்ந்து காட்டும் வழிகாட்டிகளை இகழாமல் இருப்பதே போற்றுவதிலும் முதன்மையானது. கேட வேண்டும் என்றால் அவர்கள் சொல் கீழ்படியாமலும் அழிய வேண்டும் என்றால் என்றால் அவர்களை பழிப்பதும் போதுமானது. தீயில் கருகி பிழைக்கலாம் வழிகாட்டுபவர் பழிக்கு தப்ப முடியாது. வாழும் உயர்ந்தவர் சினத்தால் அரசனும், நல்லகுடி பிறந்தவரும், துறவியும் நற்கதி அடையமாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.