திருவள்ளுவரின் திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.



எமனை கையசைத்து அழைப்பது போன்றது வழிகாட்டுபவருக்கு வழிகாட்டாதவர் தீங்கு செய்வது.



ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.



அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.



எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.


When powerless man 'gainst men of power will evil deeds essay,
Tis beck'ning with the hand for Death to seize them for its prey.


The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).



kootraththaik kaiyaal viLiththatraal aatruvaarkku
aatraadhaar innaa seyal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்ந்து காட்டும் வழிகாட்டிகளை இகழாமல் இருப்பதே போற்றுவதிலும் முதன்மையானது. கேட வேண்டும் என்றால் அவர்கள் சொல் கீழ்படியாமலும் அழிய வேண்டும் என்றால் என்றால் அவர்களை பழிப்பதும் போதுமானது. தீயில் கருகி பிழைக்கலாம் வழிகாட்டுபவர் பழிக்கு தப்ப முடியாது. வாழும் உயர்ந்தவர் சினத்தால் அரசனும், நல்லகுடி பிறந்தவரும், துறவியும் நற்கதி அடையமாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.