திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: உட்பகை / Enmity within

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.



அரத்தால் தேய்க்க எதிர்க இயலாது தேயும் தங்கம் போல் உட்பகையின் வலிமையால் குடும்ப உறவும் தேயும்.



உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.



அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.



அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.


As gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway.


A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.



aramporudha ponpoalath thaeyum uramporudhu
utpakai utra kuti


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இன்பம் தராத உறவுகளும் உண்டு அவர்கள் வாள் கொண்டு அழிக்கும் பகைவரை விட கொடுமையானவர்கள். உட்பகை உள்ளவருடன் வாழ்தல் சுடாத பானையில் உலை வைத்தல் போன்றது. உள்ளத்தின் இயல்பை அழிக்கும் உட்பகை குடுப்பத்திற்கு கேடு. உட்பகை கொண்டவருடன் வாழ்வதும் கொடிய பாம்புடன் இருட்டில் இருப்பதும் ஒன்றே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.