திருவள்ளுவரின் திருக்குறள்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.



தன்னை விட தனக்கு துணை ஒன்று இல்லை. விருந்தின் பயன் வேள்வி பயன் போல் துணையாக இருக்கும்.



விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.



விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.



விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.


To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain


The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure



inaiththuNaith thenpadhon Rillai virundhin
thuNaiththunai vaeLvip payan


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

விவசாயத்தை தொழிலாக கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருத்தாக இருப்பினும் விருந்துடன் பகிர்ந்து கொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஆட்படமாட்டார். வேள்வியை விட சிறந்த விருந்தோம்பல் மென்மையானது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.