திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இகல் / Hostility

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.



பெருமைக் கொள்பவர் மெய்ப்பொருளை காணாதவர் .பகைக் கொள்பவர் தீய அறிவுக் கொண்டவர்.



இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.



மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.



பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.


The very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity.


Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.



mikalmaeval meypporuL kaaNaar ikalmaeval
innaa aRivi navar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இகழ்ச்சி என்பது இயல்பை மறுப்பது. நடுநிலைமையுடன் விலகிடினும் இகழ்வை கருத்தில் கொண்டு துன்பம் செய்தல்கூடாது. இகல் என்ற பகை பாராட்டும் நோய் அழித்தால் சிறப்பான மாற்றம் வரும் இன்பம் வளர்ந்து துன்பம் அழியும். பகை உணர்வு அற்றவரை யாரும் வெல்ல முடியாது, எதிரிகள் வாழ்வின் ஏற்றத்திற்கு வேண்டும் என்பவர் எளிதில் அழிவார். உண்மை அறியாதவன் பெருமை கொள்வதைப் போன்றே தீய குணம் உள்ளவர் பகையுணர்வு அடைவார். நன்மை அடைபவர் இகல் என்ற பகை உணர்வு இல்லாதவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.