திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புல்லறிவாண்மை / Ignorance

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.



உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லை என்பான் இம் மாநிலத்தில் பேயாக ஒதுக்கப்படுவான்.



உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.



இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.



ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பயபேய்களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.


Who what the world affirms as false proclaim,
O'er all the earth receive a demon's name.


He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.



ulakaththaar uNtenpadhu illenpaan vaiyaththu
alakaiyaa vaikkap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறிவற்ற தன்மையே இல்லாமை எனப்படும். அறிவற்றவரும் கொடுக்கும் தன்மை பெறுபவரின் தவத்தன்மையே. அறிவற்றவரே தன்னை நுட்ப அறிவு உள்ளவராக எண்ணுவார். தவறால் ஆன குறையை மறைப்பதே பெரிய குறை. கிழ்படிதல் மற்றும் சுய சிந்தனை இல்லாதவர் உயிர் அவருக்கான நோய். உணராதவன் உளரல் அவனது அறியாமையை காட்டும். உள்ளதை இல்லை என்பவன் பேய்க்கு ஒப்பானவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.