திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தீ நட்பு / Evil Friendship

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.



போலிச் சிரிப்புடன் பழகும் நட்பைவிட பகைவரால் பல வகையில் நன்மை உண்டாகும்.



(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.



சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.



சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.


From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughers vain.


What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.



nakaivakaiya raakiya natpin pakaivaraal
paththatuththa koadi uRum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பண்பில்லாதவர் உறவை, தனிமையில் பாராட்டி கூட்டத்தில் பழிப்பவர் உறவை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவை கருதி பழகி விலகுபவர் திருடனுக்கு சமமானவர். போலியான நட்பரைவிட உண்மையான பகைவர் சிறந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.