திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பழைமை / Familiarity

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.



நெடுநாட்கள் பழகிய நடபால் எந்த பயனும் இல்லை உரிமையுடன் செயல்படும் வாய்ப்பு இல்லையென்றால்.



பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.



தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.



பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.


When to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship's use?.


Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?.



pazhakiya natpevan seyyunG kezhudhakaimai
seydhaangu amaiyaak kadai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நாட்களைப் போல் மாறாமல் நிலையாக இருப்பதே பழைமை. உரிமையும் உடன்பாடும் பழைமையால் வரும். துறவியும் பழைமை பாராட்டும் நட்பை துறக்கமாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.