திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பழைமை / Familiarity

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.



நட்பிற்கு உறுப்பு உரிமையுடன் நடப்பது. மேலும் அதை மிகுதியாக்கவது சான்றோர் கடன்.



நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.



நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.



பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.


Familiar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise.


The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.



natpiR kuRuppuk kezhudhakaimai matradhaRku
uppaadhal saandroar kadan


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நாட்களைப் போல் மாறாமல் நிலையாக இருப்பதே பழைமை. உரிமையும் உடன்பாடும் பழைமையால் வரும். துறவியும் பழைமை பாராட்டும் நட்பை துறக்கமாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.