திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பழைமை / Familiarity

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.



பழைமை எனப்படுவது என்னவென்றால் எதன் பொருட்டும் நாட்கள் மாறுவதைப் போல் மாற்றிக் கொள்ளாமல் தொடரும் நட்பு.



பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.



பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.



பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.


Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act


Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).



pazhaimai enappaduvadhu yaadhenin yaadhum
kizhamaiyaik keezhndhitaa natpu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நாட்களைப் போல் மாறாமல் நிலையாக இருப்பதே பழைமை. உரிமையும் உடன்பாடும் பழைமையால் வரும். துறவியும் பழைமை பாராட்டும் நட்பை துறக்கமாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.