திருவள்ளுவரின் திருக்குறள்

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.



துக்கம் மிகுந்து கண்ணிர் பெருக அல்லது கடுமையாய் கண்டித்து நன்மையை எடுத்துரைக்க வல்லார் நட்பை ஆராய்ந்து உறவு பாராட்ட வேண்டும்



நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.



நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.



தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.


Make them your chosen friend whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.


You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.



azhachcholli alladhu idiththu vazhakkaRiya
vallaarnhatapu aaindhu koLal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தேடாத உறவால் கேடு இல்லை. உறவு பாராட்டினால் தன்னிலை மாறும் எனவே ஆராய்ந்து பழிக்கு அஞ்சும், அழச்சொல்லும், தவறை திருத்தும் நட்பை பாராட்ட வேண்டும். துன்பமான நேரத்தில் உண்மையான நட்பை அறியலாம். சிறுமையானவர் நட்பை இழப்பதும் ஊதியமே. மாசு இல்லாதவர் நட்பை பெற்று, ஒத்திசைவு இல்லாதார் நட்பை விலக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.