திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நட்பு / Friendship

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.



நட்பிற்கு சிறந்த இலக்கணம் எது என்றால் கேட்காமலேயே தேவையறிந்து தாங்கும் தன்மையே.



நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.



நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.



மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.


And where is friendship's royal seat? In stable mind,
Where friend in every time of need support may find.


Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).



natpiRku veetrirukkai yaadhenin kotpindri
ollumvaai oondrum nilai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயல்களில் அரியது நட்புடன் இருப்பது. நிறைவானவர் நட்பு வளர்மதியாக வளர்ந்து நிறைவற்றவர் நட்பு தேய்ந்துவிடும். படிக்க இனிமையான புத்தகம் போன்றது இனிமையானவர் நட்பு. கூடி மகிழமட்டும் இல்லாமல் குறைகளை எடுத்துக் காட்டி திருத்தவும் நட்பு அவசியம். உதவி கேட்காமலேயே தானாக முன்வந்து செயல்படும் நட்பே நட்பிற்கு இலக்கணம். தன்னை உயர்வாக காட்டும் நட்பு நிலைக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.