திருவள்ளுவரின் திருக்குறள்

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.



பொருள்களை அடையவேண்டும். காரணம், பகைவரின் பகை உணர்வை அழிக்கும் ஆயுதம் வேறு இல்லை.



ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.



எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.



பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.


Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.


Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.



seyka poruLaich cheRunhar serukkaRukkum
eqkadhaniR kooriya thil


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஒன்றுமற்ற ஒருவரை மதிக்கச் செய்யும் பொருளே பொருள் இது இல்லை என்றால் யாரும் மதிப்பது இல்லை. இருள் அகற்றும் பொருள் இன்பமும் அறமும் திறமும் வளர்க்கும். அருள் என்ற அன்பின் குழைந்தையை பொருளே வளர்க்கும். குன்றின் மேல் நின்று யானையின் சண்டையை காண்பதைப் போல் தனக்கு பாதகமின்றி பொருளை அடைந்தால் அறமும் இன்பமும் இசைந்து இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.